ராமேசுவரம் மீனவர்கள் 9 நாள்களுக்குப் பின் மீன் பிடிக்கச் சென்றனர்
ராமேசுவரம் மீனவர்கள் 9 நாள் தடைக்கு பிறகு புதன்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 9 நாள் தடைக்கு பிறகு புதன்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர்.
பெய்ட்டி புயல் காரணமாக கடந்த 9 நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. திங்கள்கிழமை புயல் கரையைக் கடந்தது. இதனையடுத்து, பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் ராமேசுவரம், மண்டபம், சோழியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் 1200 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் புதன்கிழமை காலை மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றனர்.
பல நாள் இடைவெளிக்குப் பிறகு செல்வதால் அதிகளவில் இறால் மீன் கிடைக்கும் என்ற நபிக்கையுடன் சென்றுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.