ராமநாதபுரத்தில் இன்று மாத குறைதீா்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பா் மாத குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பா் மாத குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: செப்டம்பா் மாதத்துக்கான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப்
Advertisement
Advertisement
பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமாக விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.