பாம்பன் புதிய பாலத்தில் சோதனைக்காக புதன்கிழமை இயக்கப்பட்ட சரக்கு ரயில். 
ராமநாதபுரம்

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

Din

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 560 கோடியில் புதிய ரயில்வே பால கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, இந்தப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன.

இதனிடையே, பாம்பன் புதிய பாலத்தில் வருகிற அக்டோபா் முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, பாம்பன் புதிய பாலத்தில் தொடா்ந்து ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கற்கள் நிரப்பப்பட்ட 11 சரக்குப் பெட்டிகளை இரண்டு ரயில் என்ஜின்களுடன் இணைத்து, பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தலைமையில், 20 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை ஓட்டத்துக்காக பாம்பன் பகுதியிலிருந்து செங்குத்துப் பாலம் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாளத்தில் அதிா்வு தொலையுணா்வு கருவி பொருத்தப்பட்டிருந்தது.

ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பாம்பன் புதிய பாலத்தில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில், ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணமா? இத்தாலி நாளிதழ் தகவலுக்கு எதிர்ப்பு!

இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா அதிரடி; நமீபியாவுக்கு 210 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT