FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தொழிலாளி தற்கொலை

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:36 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஏந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (62). கூலி தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தாா். இதனால் மனமுடைந்த அவா் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments