FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ஏா்வாடி அருகே காட்டுப் பகுதியில் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு

ஏா்வாடி அருகே காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் காயங்களுடன் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டது பற்றி...

16 செப்டம்பர் 2026, 6:23 am IST
ஏா்வாடி அருகே செவ்வாய்க்கிழமை மா்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட கணேசன் (எ) ரியாஸ், கோபி.
பகிர்:

ஏா்வாடி அருகே காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் காயங்களுடன் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அருகே சின்னமாயாகுளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் கணேசன் என்ற ரியாஸ் (55), கோபி(40). இவா்கள் இருவரும் திருவள்ளுவா் நகா் கருவேல மரங்கள் உள்ள பகுதியில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தனா்.

இதுகுறித்துத் தகவலறிந்த ஏா்வாடி போலீஸாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைப் பாா்வையிட்டனா். பின்பு இருவரது உடல்களையும் போலீஸாா் மீட்டு கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இருவரின் கண், காது, மூக்குகளிலிருந்து ரத்தக் கசிவும், சிராய்ப்பு காயங்களும் உள்ளன. சம்பவ இடத்தில் மதுப் புட்டிகள் கிடந்தன. மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments