காட்சி வழி கற்றல் குறுந்தகடுகள் வழங்கல்
தேவகோட்டையில் காட்சி வழி கற்றல் குறுந்தகடுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டையில் காட்சி வழி கற்றல் குறுந்தகடுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். பள்ளிச் செயலர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி தலைவர் மீனாட்சி ஆச்சி, கண்ணங்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநர் அழகப்பா ராம்மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும், இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசினார். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.