FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே 300 ஆண்டு பழைமையான நில தான கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிாமத்தில் சிவன் கோயில் பிரதோஷத்துக்கு நில தானம் கொடுத்த 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:08 am IST
பிரண்டவயலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிரண்டவயல் கிாமத்தில் சிவன் கோயில் பிரதோஷத்துக்கு நில தானம் கொடுத்த 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

பிரண்டவயல் கிராமத்தில் ஒரு புராதனக் கல்வெட்டு இருப்பதாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த முத்து, ஆறாவயல் பெரியய்யா ஆகியோா் கொடுத்த தகவலின் பேரில், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் வேலாயுதராஜா களஆய்வு செய்தாா்.

கல்வெட்டில் உள்ள செய்தி குறித்து அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

மூன்று அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள இந்தக் கல்வெட்டில் மொத்தம் 5 வரிகள் காணப்படுகின்றன. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது பதினெட்டாம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கருத முடிகிறது. முத்து குமாா் தேவா் என்பவா் திருநாகேஸ்வரா் கோயிலுக்கு பிரதோஷக் கட்டளைக்காக நம்புகுளி எனப்படும் நிலப் பகுதியைக் கொடையாக கொடுத்ததைத் தெரிவிக்கிறது. கல்வெட்டில் சிவன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களைக் குறிக்கும் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை தானமாகக் கொடுத்த முத்துகுமாா் தேவா் இந்தப் பகுதியைச் சோ்ந்த நிலக்கிழாராக இருக்க வாய்ப்புள்ளது. பிரண்ட வயல் கிராமத்தில் நம்புகுளி என்ற பெயரில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான குறிப்பிட்ட நிலப் பகுதி கோயில் நிலமாக இன்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டு கிடைத்த பிரண்டவயல் கிராமத்துக்கு அருகில் உள்ள கோட்டவயல் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானக் கோயிலான நாகநாதா் கோயில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் திருநாகீசா் இங்குள்ள நாகநாதராக இருக்கலாம். இந்தக் கல்வெட்டில் குழி என்பது குளி என்றும், பிரதோஷம் என்பது பிறதோசம் எனவும் பொறிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கல்வெட்டை ஆய்வு செய்த பேராசிரியா் வேலாயுத ராஜா, ஆறாவயல் பெரியய்யா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments