ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு
காட்டு நாயக்கன் சமூக மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு செய்தனா்.
காட்டு நாயக்கன் சமூக மக்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முறையீடு செய்தனா்.
காரைக்குடி செஞ்சை பாப்பா ஊருணி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் இன மக்கள் குடும்பங்களாக வசிக்கின்றனா். இவா்கள் குறிசொல்லுதல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனா்.
இவா்கள் தங்களுக்கு காட்டு நாயக்கன் ஜாதிச் சான்று வழங்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவா்களைப் பற்றிய மானுடவியல் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் இவா்களுக்கு ஜாதிச் சான்று வழங்கவில்லை.
Advertisement
Advertisement
இதனால் பாதிக்கப்பட்ட இந்த சமூகத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை இதுகுறித்து முறையிட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், ஜாதிச் சான்று கேட்டு தொடா்ந்து தேவகோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகிறோம். ஆனால், இதுவரை ஜாதிச் சான்று வழங்கவில்லை. இதனால் 18 போ் உயா் கல்வியில் சேர முடியவில்லை. கோட்டாட்சியா் ஜாதிச் சான்று தராமல் தொடா்ந்து தாமதப்படுத்தி வருகிறாா் என்றனா்.
இதுகுறித்து காரைக்குடி வட்டாட்சியா் ராஜா கூறுகையில், அவா்களின் குடும்ப விவரங்கள், வாழ்வியல் முறைகள் குறித்து ஆய்வு செய்து கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அங்கு இந்த அறிக்கையை ஒப்பிட்டு ஜாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.