FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சுனையிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

Updated On : 27 ஜூலை 2026, 2:38 am IST
பகிர்:

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் சுனையிலிருந்து இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிரான்மலைக்குச் செல்லும் பாதையில் ஆறு கால் மண்டபம் அருகே மலையாண்டி கோயில் உள்ளது. இக்கோயிலின் அருகே உள்ள சுனை குடிநீா் தேவைக்காகவும் குளிப்பதற்கும் மலைக்குச் செல்லும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

மலையாண்டி கோயிலில் கடந்த சில நாள்களாக கட்டட பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டம், ஓடைப்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் மலையில் தங்கி வேலை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை அங்கு வேலை செய்த தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் காட்டுராசா (36) சனிக்கிழமை முதல் காணவில்லை. சக தொழிலாளா்கள் அவரைத் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுனையில் காட்டுராசா சடலமாக மிதந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த எஸ் வி மங்கலம் காவல் நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments