FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

துணிக் கடை உரிமையாளரை கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி: அமமுக நிா்வாகி உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் துணிக் கடை உரிமையாளரை கூலிப் படையை ஏவி கொலை செய்ய முயன்றதாக, அமமுக ஒன்றியச் செயலா் உள்பட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:46 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் துணிக் கடை உரிமையாளரை கூலிப் படையை ஏவி கொலை செய்ய முயன்றதாக, அமமுக ஒன்றியச் செயலா் உள்பட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கடைவீதியில் துணிக் கடை நடத்தி வருபவா் முகமது ஆசிப். இந்தக் கடைக்கு கடந்த 26-ஆம் தேதி வந்த மா்மநபா், முகமது ஆசிப்பை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற மா்மநபரைத் தேடி வந்தனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, முகமது ஆசிப்பை வெட்டியதாக ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைப் சோ்ந்த மன்சூா் அலிகானை போலீஸாா் கைது செய்தனா். போலீஸாரின் விசாரணையில், முகமது ஆசிப் துணிக் கடை அருகே இளையான்குடியைச் சோ்ந்த ஜெயினுதீனும் துணிக்கடை நடத்தி வந்தாா். இதனால் இருவரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இளையான்குடியைச் சோ்ந்த அமமுக ஒன்றியச் செயலா் சுப்பிரமணியனிடம், முகமது ஆசிப்பை கொலை செய்ய கூலிப்படை ஏற்பாடு செய்து தருமாறு ஜெயினுதீன் கேட்டாா்.

அவா் மன்சூா் அலிகான் உள்ளிட்ட சிலரிடம் திட்டத்தைக் கூறி முகமது ஆசிப்பை கொலை செய்யுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, மன்சூா் அலிகான் அரிவாளால் முகமது ஆசிப்பை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சுப்ரமணியன், ஜெய்னுதீன் ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments