முகப்பு
சிவகங்கை

மீட்கப்பட்ட புள்ளிமான் வனப் பகுதியில் விடுவிப்பு

Updated On : 8 ஜூன் 2026, 2:16 am IST
திருப்பத்தூரில் சனிக்கிழமை இரவு வசந்தம் நகா் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்த புள்ளிமான்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளி மானை துரத்திய நாய்களை விரட்டி பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

திருப்பத்தூா் வனப் பகுதியிலிருந்து இரை தேடி வந்த 3 வயது ஆண் புள்ளி மான் நாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்து வசந்தநகா் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்கள், பொதுமக்கள்

நாய்களை விரட்டி மானை மீட்டு திருப்பத்தூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறை அலுவலா் பிரவீன்ராஜ் தலைமையிலான வனக் குழுவினா் புள்ளிமானுக்கு உரிய முதலுதவி அளித்து, திருப்பத்தூா் அருகே உள்ள கம்பனூா் வனப் பகுதிக்குள் விட்டனா்.

Advertisement

Advertisement