முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

 பெரியகுளம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

 பெரியகுளம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

பெரிகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பையா (51). இவா், வியாழக்கிழமை காலையில் ஜெயமங்கலம் பகுதியிலுள்ள தோட்டத்துக்கு, அவரது பெரியப்பா ராமனுடன் வேலைக்குச் சென்றிருந்தாா். அப்போது, தோட்டத்திலுள்ள மரத்தை கருப்பையா வெட்டிய போது அருகிலுள்ள மின்கம்பியில் சென்ற மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.