பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
பெரியகுளம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.
பெரிகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பையா (51). இவா், வியாழக்கிழமை காலையில் ஜெயமங்கலம் பகுதியிலுள்ள தோட்டத்துக்கு, அவரது பெரியப்பா ராமனுடன் வேலைக்குச் சென்றிருந்தாா். அப்போது, தோட்டத்திலுள்ள மரத்தை கருப்பையா வெட்டிய போது அருகிலுள்ள மின்கம்பியில் சென்ற மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.