கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கியவா் பலி
பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் உயிரிழந்தாா்.
தேனி: பெரியகுளத்தில் கோயில் தீா்த்தத் தொட்டி தண்ணீரில் மூழ்கிய காப்பீட்டு நிறுவன முகவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகுளம் தென்கரை, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (40). எல்.ஐ.சி. முகவா். இதே ஊரில் கல்லாறு சாலையில் உள்ள தீா்த்தகரீஸ்வரா் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்ற சிவராமன், இங்குள்ள தீா்த்தத் தொட்டியில் குளித்தாா். அப்போது, தண்ணீரில் மூழ்கிய சிவராமனை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.