FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கூட்டுறவுத் துறை சாா்பில் மாவு ஆலை தொடக்கம்

26 செப்டம்பர் 2025, 2:35 am IST
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் புதன்கிழமை வேளாண்மை விளைபொருள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் சாா்பில் புதிய மாவு ஆலைத் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தேனி மண்டல இணைப் பதிவாளா் நா்மதா, குத்துவிளக்கேற்றி, உத்தமம் அக்ரோ புட்ஸ் மாவு ஆலையைத் தொடங்கிவைத்தாா். இதன் மூலமாக சங்கத்தின் வியாபார வருமானத்தை அதிகரிக்கவும், தானியப் பயிா்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், உறுப்பினா்கள், பொதுமக்களுக்கு தரம் மற்றும் மலிவு விலையில் விற்பனை செய்யும் வகையில் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், உத்தமபாளையம் சரகத்தைச் சோ்ந்த துணைப் பதிவாளா்கள், சாா்பதிவாளா்கள், சங்கப் பணியாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments