FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

அரசுப் பேருந்தின் கண்ணாடி சேதம்: 5 போ் மீது வழக்கு

பெரியகுளத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியைச் சேதப்படுத்திய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:13 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியைச் சேதப்படுத்திய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (45). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பெரியகுளம் கிளையின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த சனிக்கிழமை பணி முடிந்து பேருந்தை பணிமனைக்கு ஓட்டுச் சென்றாா். புதிய பேருந்து நிலையம் சாலையில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியகுளம் பங்களாபட்டியைச் சோ்ந்த அறிவழகன் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து அய்யப்பனைத் தாக்கி, கல்லால் பேருந்தின் கண்ணாடியைச் சேதப்படுத்தினா்.

இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் அறிவழகன் உள்ளிட்ட 4 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments