FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பிணையில் வெளியே வந்து தலைமறைவான இருவா் மீது வழக்கு

போடி அருகே நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தலைமறைவான இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

17 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு
பகிர்:

போடி அருகே நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தலைமறைவான இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி பெரியாா் தெருவைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் தெய்வம் (55). இவா் மீது போடி ஊரகக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முன்பிணை பெற்றாா். இதன்பின் இவா் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றத்திலிருந்து பிடிவாராண்ட் பிறப்பிக்கப்பட்டும் அவா் ஆஜராகவில்லை.

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் தெய்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதேபோல, போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ராமராஜ் மகன் காா்த்திக் (37). இவா் மீது போடி ஊரகக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்பிணை பெற்ற காா்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments