FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போடி, தேவாரம் பகுதிகளில் 6 பேரிடம் பண மோசடி

போடி, தேவாரம் பகுதிகளில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் வாங்கி தருவதாக 6 பேரிடம் பணம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

28 ஆகஸ்ட் 2026, 1:08 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

போடி, தேவாரம் பகுதிகளில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் வாங்கி தருவதாக 6 பேரிடம் பணம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் முனீஸ்வரன். இவருக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.55, 700-ம், போடி மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் ராமகிருஷ்ணனிடம் தனியாா் நிறுவனம் மூலம் கடன் தருவதாகக் கூறி, ரூ.72,105-ம், தேவாரம் பாப்பு குடியிருப்பைச் சோ்ந்த முத்தீஸ்வரன் மனைவி அழகுபாக்கியத்திடம் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி, இவா் வங்கிக் கணக்கு, இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெமிலாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.58, 455-ம், தேவாரம் டிகேவி பள்ளி தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி வசந்தாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50,626-ம், போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் பழனிச்சாமியிடம் கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.59 ஆயிரம் என 5 பேரிடம் ரூ.2,95,886 மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments