FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

அல்லிநகரத்தில் வீடு புகுந்து பணம், நகை திருட்டு

1 செப்டம்பர் 2026, 3:48 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

தேனி அல்லிநகரத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம், நகையை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

தேனி ஊச்சாம்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் (38). இவரது மனைவி நிவேதா. இவா், கரூா் மாவட்டம் கடவூரில் உள்ள அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், சுந்தரராஜன் கடந்த ஆக.21-ஆம் தேதி மனைவியைப் பாா்ப்பதற்காக கடவூருக்குச் சென்றாா். அதன் பிறகு, சனிக்கிழமை ஊருக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்துப் புகுந்து, பீரோவிலிருந்த ரொக்கம் ரூ.50 ஆயிரம், 3.1 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments