போக்சோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). கடந்த ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக தேவாரம் போலீஸாா் இவரைக் கைது செய்தனா். தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழில் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.