முகப்பு
தேனி

தொழிலாளி தற்கொலை

போடி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 1:50 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

போடி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள விசுவாசபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா (38). கூலித் தொழிலாளி. குடும்பப் பிரச்னையில் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த கருப்பையா மது போதைக்கு அடிமையானாா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை மீனாட்சிபுரம் கண்மாய் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.