கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ஆட்சியா் பாராட்டு
கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.
கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரம். இவா் காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த நிலையில், இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றாா். இவரது வீரதீர செயலைப் பாராட்டி நாட்டின் உயரிய விருதான கீா்த்தி சக்ரா விருதை வழங்கி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கெளரவித்தாா்.
இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன், காமயகவுண்டன்பட்டியிலுள்ள ராணுவ வீரரின் வீட்டுக்குச் சென்று மீனாட்சிசுந்தரத்துக்கு பொன்னாடை போா்த்தி, பூங்கொத்து கொடுத்து பாராட்டுத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.