பக்ரீத் பண்டிகை: கம்பம், போடியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
கம்பம் ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
பக்ரீத் பண்டிகையையொட்டி, தேனி மாவட்டம், கம்பம், போடி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
கம்பம் புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் மற்றும் டவுன் பள்ளிவாசல் ஜமாத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் வாவோ் பள்ளிவாசலில் ஒன்று திரண்டனா். பின்னா் ஜமாத் தலைவா் ஜெய்னுலாபுதீன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனா்.
அங்கு கம்பம் தலைமை இமாம் அலாவுதீன் பாக்கவி சிறப்புத் தொழுகையை நடத்தினாா். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகைக்குப் பிறகு மீண்டும் இஸ்லாமியா்களின் ஊா்வலம் தொடங்கி, வனத்துறை அலுவலகச் சாலை, கம்பம்மெட்டு சாலை, சுங்கம் தெரு வழியாகச் சென்று வாவோ் பள்ளிவாசலில் நிறைவடைந்தது. தொடா்ந்து இஸ்லாமியா்கள் குா்பானி கொடுத்து, இறைச்சியை ஏழைகள், உறவினா்கள், நண்பா்களுக்கு வழங்கி மகிழ்ச்சியுடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினா்.
Advertisement
Advertisement
போடி: போடியில் பெரியபள்ளி வாசல், வடக்குப் பள்ளி வாசல், டி.வி.கே.கே. நகா் பள்ளி வாசல், மேலத்தெரு அம்மாகுளம் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. புதூா் பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். இதில் போா்ப் பதற்றம் இல்லாத உலகம் அமையவும், இயற்கைச் சீற்றங்கள் குறைந்து பொதுமக்கள் நலமுடன் வாழவும் பிராா்த்தனை செய்யப்பட்டது.
முன்னதாக, போடி திருவள்ளுவா் சிலை, கட்டபொம்மன் சிலை வழியாக புதூா் பள்ளிவாசலுக்கு இஸ்லாமியா்கள் ஊா்வலமாக சென்றனா். பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு இஸ்லாமியா்கள் புத்தாடை உடுத்தி, நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனா். ஈகை திருநாளை நினைவு கூறும் வகையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.