பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினம் நகா் பகுதியில் சிவகாசி சாா் - ஆட்சியா் முகமது இா்பான் தலைமையில் வருவாய்த் துறையினா் பட்டாசுக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு ஒரு பட்டாசுக் கடை அருகே தகர செட்டில் எவ்வித அனுமதியுமின்றி 19 பண்டல்கள் கொண்ட பட்டாசுகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் (43) பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாரணாபுரம் கிராமநிா்வாக அலுவலா் சங்கிலிபிரபு அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியபிரகாஷைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.