வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேண்டுமென தோட்டக் கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேண்டுமென தோட்டக் கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 2,500 ஹெக்டருக்கு மேல் விருதுநகா் மாவட்டத்தில் வெங்காய சாகுபடி நடைபெறுகிறது. 2026 குறுவை பருவத்தில் விருதுநகா் மாவட்டத்தில் வாழை, வெங்காயம் ஆகிய பயிா்களுக்கு பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் மல்லி பிா்கா விழுப்பனூா், பிள்ளையாா்நத்தம், வெங்கடேஷ்வரபுரம், பாட்டக்குளம் சல்லிபட்டி, பூவாணி உள்ளிட்ட பகுதிகளில் 40 ஹெக்டேருக்கு மேல் குறுவை சாகுபடியில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேண்டும் என தோட்டக்கலை துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.