FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 7:23 am IST
ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு முனீஸ்வரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மூா்த்தி, வத்திராயிருப்பு தாலுகா செயலா் கோவிந்தன் ஆகியோா் உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான ராமசாமி பேசினாா்.

இதில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும்,வியாபாரிகளுக்கான சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் மம்சாபுரம் பேரூா் செயலா் ராஜேந்திர சோழன், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா துணைச் செயலா் செல்வம், மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments