FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:30 am IST
ஜெயங்கொண்டத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments