FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையின் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

ஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையின் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (51). இவா் விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வெற்றிச்செல்வி அங்கன்வாடி மைய சத்துணவு பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், புதன்கிழமை மாலை 4 மணி அளவில் சிமென்ட் ஆலையில் பணியிலிருந்த சரவணன் ‘டிராக் சேஞ்ச் கன்வேயரில்’ தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சரவணனின் மனைவி வெற்றிச்செல்வி அளித்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments