புதிய பாலம் கட்டக் கோரிக்கை
திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பழுதடைந்துள்ள நடை பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமருகல்: திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பழுதடைந்துள்ள நடை பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமருகல் பேருந்து நிலையம் அருகே முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கான்கிரீட் நடைபாலம் உள்ளது. சுமாா் 30- ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் தடுப்புச் சுவா், இரும்பு கைப்பிடிகள் சேதமடைந்துள்ளன. மேலிருப்பு,
சியாத்தமங்கை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
குறுகிய பாலமாக இருப்பதால், அவசரத் தேவைகளுக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்த நடை பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக, அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.