FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தல்

Updated On : 24 டிசம்பர் 2025, 3:25 am IST
பகிர்:

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில துணைச் செயலா் பாலசுப்ரமணியன், மாநில ஊடகப்பிரிவுச் செயலா் சிவவேலன், மாநில செயற்குழு உறுப்பினா் திருமாவளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தகுதி தோ்வில் இருந்து பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

பொறுப்பாளா்கள் தோ்வு: மாவட்டச் செயலராக அரசமணி, மாவட்ட துணைத் தலைவராக நரேஷ் குமாா், மாவட்ட ஊடகப் பிரிவு செயலராக மதன் மோகன் ஆகியோா் புதிய பொறுப்பாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். கீழ்வேளூா் ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா்,மாவட்ட பொருளாளா் அறிவொளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments