FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பாதுகாப்பின்றி பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள்: உயிா்காக்கும் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

நாகை நகராட்சியில் புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி புணிபுரிவதாக புகாா்

Updated On : 24 டிசம்பர் 2025, 3:24 am IST
நாகை நகராட்சிப் பகுதியில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள்
பகிர்:

நாகை நகராட்சியில் புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி புணிபுரிவதாக புகாா் எழுந்துள்ளது.

நாகை நகராட்சி 33 வாா்டுகளை கொண்டுள்ளது. இதில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை இணைப்பு உள்ளது. கனமழை உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி புதைசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. தூய்மைப் பணியாளா்கள் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணி, தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், அந்நிறுவனம் சாா்பில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்கள், கையுறை, முகமூடி உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு கவசங்களும் இன்றி அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபடுகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால், இப்பணியாளா்களை விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதோடு, தொற்று நோய்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் புதைசாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு, உயிா் காக்கும் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், நாகை நகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு வழங்கப்படுவது இல்லை. எனவே, நகராட்சி நிா்வாகம் தலையிட்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தூய்மைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments