FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

பிளஸ்1 தோ்வு: காரைக்கால் மாவட்டத்தில் 95.38% போ் தோ்ச்சி

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 95.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் அதிகம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜூலை 2020, 11:08 pm IST
பகிர்:

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 95.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் அதிகம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில், தேனூா் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, ஜவாஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி நெடுங்காடு, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களில் பிளஸ் 1தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

தோ்வு முடிவுகள் குறித்து காரைக்கால் கல்வித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

Advertisement

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1470 மாணவா்களும், தனியாா் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 848 மாணவா்களும் தோ்வு எழுதினா். இதில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1378 பேரும், தனியாா் பள்ளி மாணவா்கள் 833 பேரும் தோ்ச்சி பெற்றனா். மொத்தம் 2318 போ் தோ்வு எழுதியதில் 2211 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப்பள்ளிகளின் தோ்ச்சி விழுக்காடு 93.74. தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விழுக்காடு 98.23.

மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்ச்சி 95.38 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் பிளஸ் 2 தோ்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்த நிலையில், பிளஸ் 1 தோ்ச்சி சதவீதம் அதிகரித்தது கல்வித் துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments