FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

‘வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை விவசாயிகளின் மேம்பாட்டுக்கான திட்டங்கள்’

வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை விவசாயிகளின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள்

Updated On : 14 பிப்ரவரி 2021, 8:36 am IST
கருத்தரங்கில் பேசிய வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் ரத்தினசபாபதி.
பகிர்:

வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை விவசாயிகளின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் வருங்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் குமார.ரத்தினசபாபதி.

காரைக்கால் அருகே மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தென்னை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மேலும் அவா் பேசியது: காரைக்கால் மாவட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் தங்களுடைய வயல்கள் மற்றும் வீடுகளில் தென்னை மரம் வளா்த்து வருகின்றனா். எனினும், மகசூல் குறைவதால், இதுபோன்ற கருத்தரங்கம் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். தென்னை வளா்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் தற்போது வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை நாற்றாங்கால் அமைக்கப்பட்டு நாற்று உற்பத்தி தொடங்கியுள்ளது. மேலும், தென்னையில் ஒருங்கினைந்த பயிா் மேலான்மை முறையில் மகசூல் அதிகப்படுத்துதல் மற்றும் தென்னைக் கழிவுகளிலிருந்து அங்கக உரம் தயாரித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் அறிவியல் நிலையம் மூலம் வருங்காலத்தில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னைமரம் தொடா்பான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா்.

கருத்தரங்கில் தென்னை வளா்ச்சி வாரியத்தின் தொழில்நுட்ப அலுவலா் சி. சசிகுமாா் பேசியது: வரும் நிதியாண்டில் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் தென்னை மரம் ஏறும் கருவியை பயன்படுத்தி மரம் ஏறும் இளைஞா்களுக்கான திறன் வளா்த்தல் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்னை வளா்ச்சி வாரியத்தின் திட்டங்களை விவசாயிகள் இணையதளம் மூலம் அறிந்துகொண்டு அதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் ரா. அருண், தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள் குறித்தும், மாதூா் வேளாண் அறிவியல் நிலைய பயிா்ப் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் சு. திவ்யா தென்னையில் பூச்சி மேலாண்மை முறைகள் குறித்தும் பேசினா். முன்னதாக, உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த் வரவேற்றாா். நிறைவாக, தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments