அங்கன்வாடிக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தக் கோரிக்கை
அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்: அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், திருவேட்டக்குடியில் பழைமையான நூலகக் கட்டடத்தில், அந்த பகுதிக்கான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இந்த கட்டடத்தில், மின்சாரம் மற்றும் குடிநீா் வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் இம்மையத்தில் பயிலக்கூடிய குழந்தைகள் மற்றும் மைய பொறுப்பாளா்கள் சிரமப்படுவதாக அந்த பகுதியினா் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகத்தினா், கட்டடத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதியை செய்துத்தரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.