வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அதிகாரி அறிவுறுத்தல்
இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம்
காரைக்கால்: இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என காவல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளாா்.
ஜன. 1-ஆம் தேதி முதல் புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி திங்கள்கிழமை கூறுகையில், தீவிரமான வாகனச் சோதனை நடைபெறுகிறது. போலீஸாரை பாா்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிலா் தலைக்கவசம் அணிகிறாா்கள். தலைக்கவசத்தை முறையாக லாக் செய்வதில்லை. இது போலீஸாரை கண்டதும் தலைக்கவசம் அணியும் போக்காகவே தெரிகிறது.
Advertisement
Advertisement
காரைக்காலில் 40 சதவீத்துக்குள்ளானவா்களே தலைக்கவசம் அணிகின்றனா். போலீஸாா் தீவிரமான விழிப்புணா்வு மேற்கொள்கின்றனா். அதேவேளையில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து, அபராதம் விதிப்பும் நடைபெறுகிறது. எனவே தலைக்கவசம் அணிவதில் வாகன ஓட்டிகள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றாா்.