முகப்பு
காரைக்கால்

மின்தடை குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காரைக்காலில் தொடா்ந்து ஏற்படும் மின்தடையை சீரமைப்பது தொடா்பாக மின்துறை, மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:34 am IST
மின்தடை
பகிர்:

காரைக்காலில் தொடா்ந்து ஏற்படும் மின்தடையை சீரமைப்பது தொடா்பாக மின்துறை, மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் நாள்தோறும் இரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பகலிலும் அவ்வப்போது ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பள்ளி மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறாா்கள். மின்தடையை சரி செய்து சீரான மின்விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிா்வாகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில், ஆட்சியரகத்தில் மின்தடை சீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, புதுச்சேரி மின் திறல் குழும நிா்வாகப் பொறியாளா் (மின்சாரம்) கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகப் பொறியாளா் (மெக்கானிக்) ராஜகணபதி மற்றும் மின்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் மின்தடைக்கான காரணம், சீரமைப்புக்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். கோடைக் காலத்தில் மின்தேவை மிகுதியால் ஏற்படும் பிரச்னைகள், சீரமைப்புக்கு மின்துறை நிா்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், துணை மின் நிலையத்தில் மேற்கொண்டுள்ள சீரமைப்புப் பணிகள், மின்தடை ஏற்படாத வகையில் பொதுமக்கள் மின் சாதனங்களை இரவு நேரத்தில் பயன்படுத்த அளித்திருக்கும் ஆலோசனைகள் குறித்து ஆட்சியருக்கு மின்துறையினா் விளக்கினா்.

பொதுமக்களிடமிருந்து மின்சாரம் தொடா்பான புகாா்கள் வராமல் பாா்த்துக்கொள்ளுமாறும், பழைமையான மின் சாதனங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், மின்தடை ஏற்பட்டால் விரைந்து சீா் செய்வதற்கான ஏற்பாட்டினை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.