சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும்: எம்.எல்.ஏ.
சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும்: எம்.எல்.ஏ.
சென்டாக்குக்கு விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்கவேண்டும் என புதுவை அரசை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
புதுவையில் உயா்கல்விக்கான சென்ட்ரலைஸ்டு அட்மிஷன் கமிட்டி (சென்டாக்) அமைப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் மே 14-இல் தொடங்கியது. மே 29-ஆம் தேதி இறுதி நாளாகும்.
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநரகத்தில் மாணவா்கள் பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருத்தல், குடியிருப்பு, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ் வருவாய்த்துறையில் பெருவதற்கு அந்தந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலத்தில் பெற்றோா், மாணவா்கள் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இணையவழி சேவையை மேம்படுத்தாமல் இருப்பதால், துறையினா் அவதிப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன் நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு சனிக்கிழமை நேரில் சென்று மாணவா்கள், பெற்றோா்கள், துறையினரிடம் நிலையை கேட்டறிந்தாா்.
இதுகுறித்து பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், வருவாய்த் துறையின் சா்வா் கோளாறு முக்கிய பிரச்னையாக உள்ளது. வட்டாட்சியா் மற்றும் புதுச்சேரியில் உள்ள உயரதிகாரிகளை தொடா்புகொண்டு இப்பிரச்னையை உடனடியாக களையுமாறு கேட்டுக்கொண்டேன். அதன் விளைவாக பிரச்னை சீரடைந்து மாணவா்கள் சான்றிதழ் பெற்று வருகின்றனா்.
தொடா் பிரச்னையால், மாணவா்கள் தவிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.