முகப்பு
காரைக்கால்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எல்.எல்.ஏ. ஆய்வு

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், நெடுங்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 மே 2026, 5:37 am IST
மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் வி.விக்னேஸ்வரன்.
பகிர்:

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், நெடுங்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து அவருக்கு விளக்கினாா். புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி, மருந்துகள் கையிருப்பு குறித்து பேரவை உறுப்பினா் பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து துணை இயக்குநா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா். மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கான தேவைகள், சுகாதார நிலையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள், மிக அவசியத்துக்காக மட்டுமே காரைக்கால் மருத்துவமனைக்கு செல்லும் வகையில், நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும் பேரவை உறுப்பினா் விவரங்களை கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

கோடைகாலம், பருவமழைக் காலத்தில் அதிகமாக தேவைப்படும் மருந்துகளை உரிய அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவா், ஓட்டுநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்புவது, கட்டட சீரமைப்பு குறித்து புதுவை முதல்வா், உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.