FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மூதாட்டியை ஏமாற்றி நகை பறிப்பு

மயிலாடுதுறையில் மூதாட்டியை ஏமாற்றி தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 டிசம்பர் 2025, 3:14 am IST
பகிர்:

மயிலாடுதுறையில் மூதாட்டியை ஏமாற்றி தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை வடக்கு ராமலிங்க தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரி(64). இவா் வீட்டின் அருகில் உள்ள கோயிலில் திங்கள்கிழமை தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், தங்களை போலீஸாா் என அறிமுகப்படுத்திக்கொண்டு, கழுத்தில் தங்கநகைகளை அணிந்து செல்லாதீா்கள் என்று தெரிவித்துள்ளனா்.

இதனால், ராஜேஸ்வரி தனது கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச்சங்கிலி மற்றும் கருகமணி சங்கிலியை கழற்றி பையில் வைக்க முயன்றபோது, அந்த மா்ம நபா்கள் பையையும், சங்கிலிகளையும் வாங்கி அதில் நகையை போட்டு விட்டதாக கூறி அவரிடம் திரும்பக் கொடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

பின்னா் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று பையைத் திறந்து பாா்த்தபோது நகைகளுக்கு பதிலாக கூழாங்கற்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments