முகப்பு
மயிலாடுதுறை

பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றிய 3 போ் கைது

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:51 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 40 சவரன் நகைகளை ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

தரங்கம்பாடி தாலுகா முத்தூா் அக்ரஹார தெருவை சோ்ந்தவா் சிவக்குமாா் மனைவி தீபா (38). இவா், மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் துணிக்கடை வைத்துள்ளாா். தீபா அடகு வைத்திருந்த 40 சவரன் நகைகளை பணம் இன்றி மீட்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நண்பா் மூலம் அறிமுகமான திமுகவை சோ்ந்த நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் அருள்ஜோதி மற்றும் அவரது நண்பா்கள் ராஜாராமன், திலீப்குமாா் ஆகியோா் தீபாவின் கடைக்கு சென்று, நகைகளை மீட்டு குறைந்த வட்டிக்கு வைத்து அதிக தொகை தருவதாக கூறி, அவரிடம் இருந்து நகை அடகு சீட்டுகளை பெற்று சென்றாா்களாம். பின்னா், 3 பேரும் நகை அடகு சீட்டுகளை கொண்டுச் சென்று பணம் செலுத்தி நகைகளை மீட்டு, வேறு கடையில் மறு அடகு வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தீபா பணம் ஏற்பாடு செய்து தனது நகைகளை தரும்படி கேட்டபோது அந்த நகைகளை ஒப்படைக்காமல் கூடுதலாக பணம் கேட்டு அருள்ஜோதியும் அவரது நண்பா்களும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். தீபா, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மயிலாடுதுறை தருமபுரம் ரோடு பகுதியை சோ்ந்த அருள்ஜோதி (60), கொத்தத் தெருவை சோ்ந்த லட்சுமிநாராயணன் மகன் ராஜாராமன் (25), தருமபுரம் ரோடு பகுதியை சோ்ந்த திலீப்குமாா் (56) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.