சீர்காழி பெருந்தோட்டம் பள்ளிவாசலில் பக்ரீத் கொண்டாட்டம்! எம்எல்ஏ செந்தில் செல்வன் வாழ்த்து
சீர்காழி பெருந்தோட்டம் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு எம்எல்ஏ இரா. செந்தில் செல்வன் வாழ்த்து
சீர்காழி பெருந்தோட்டம் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு எம்எல்ஏ இரா. செந்தில் செல்வன் வாழ்த்து தெரிவித்தார்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சீர்காழி அருகே பெருந்தோட்டம் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் இரா. செந்தில் செல்வன் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இஸ்லாமியர்கள் தங்களுக்குள் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
Advertisement
Advertisement
இதேபோல் மணி கிராமம், மேலச்சாலை, புங்கனூர், திருமுல்லைவாசல், தை க் கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.
Bakrid Celebrations at Perunthottam Mosque in Sirkazhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.