முகப்பு
மயிலாடுதுறை

சீர்காழி பெருந்தோட்டம் பள்ளிவாசலில் பக்ரீத் கொண்டாட்டம்! எம்எல்ஏ செந்தில் செல்வன் வாழ்த்து

சீர்காழி பெருந்தோட்டம் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு எம்எல்ஏ இரா. செந்தில் செல்வன் வாழ்த்து

சீர்காழி பெருந்தோட்டம் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - DNS
பகிர்:

சீர்காழி பெருந்தோட்டம் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு எம்எல்ஏ இரா. செந்தில் செல்வன் வாழ்த்து தெரிவித்தார்.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சீர்காழி அருகே பெருந்தோட்டம் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் இரா. செந்தில் செல்வன் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இஸ்லாமியர்கள் தங்களுக்குள் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Advertisement

Advertisement

இதேபோல் மணி கிராமம், மேலச்சாலை, புங்கனூர், திருமுல்லைவாசல், தை க் கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

summary

Bakrid Celebrations at Perunthottam Mosque in Sirkazhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.