FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக நினைவு யாத்திரைக் குழுவினர் மௌனம் அனுசரிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று (ஏப்.29)  அடையாள மெளனம் மேற்கொண்டனர்.

1 பிப்ரவரி 2024, 2:36 pm IST
வேதாரண்யத்தில் அடையாள மெனனம் மேற்கொண்ட யாத்திரைக் குழுவினருடன், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி.,பி.வி.ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார்.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் நினைவு யாத்திரையில் பங்கேற்ற குழுவினருடன் காங்கிரஸார் இன்று (ஏப்.29)  அடையாள மெளனம் மேற்கொண்டனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ல் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு நிகழாண்டு சிறப்பான வகையில் கொண்டாடப்படுகிறது.

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் நினைவு யாத்திரை முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு தலைமையில் ஏப்.13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கியது.

Advertisement

Advertisement

இந்த குழுவினர் 232 கிலோ மீட்டர் தொலைவை நடைபயணமாக மேற்கொண்டு வியாழக்கிழமை இரவு வேதாரண்யம் வந்தடைந்தனர்.

இந்த குழுவினர் இன்று காலையில் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் அடையாள மெளனம் மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மெளனத்தில், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னால் எம்.பி., பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார் பங்கேற்றனர்.


மாலையில் உப்புத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு யாத்திரை குழுவினருடன் வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் இருந்து பேரணி நடைபெறுகிறது. இந்த குழுவினர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காலை 7 மணிக்கு அகஸ்தியம் பள்ளி நினைவு தூண் வளாகத்தில் உப்பு அள்ளும் நிகழ்சியில் ஈடுபடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments