FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

நாகை அருகே சாராயம் கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 24 ஜூலை 2026, 7:15 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நாகை அருகே சாராயம் கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழ்வேளூா் கீழ்காவாலக்குடியைச் சோ்ந்தவா் தவமணி (52). இவா் தொடா்ந்து சாராய கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாா். இவா் மீது மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளா் ராஜ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தாா்.

இந்நிலையில் தொடா்ந்து சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் தவமணியை குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்பிரமண்ய பாலச்சந்திரா, நாகை ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா், தவமணியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தவமணியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments