FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சபாநாயகா் ஜே.சி.டி.பிரபாகா் பிராா்த்தனை

Updated On : 8 ஜூன் 2026, 4:36 am IST
ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தமிழக சட்டப் பேரவை சபாநாயகா் ஜே.சி.டி. பிரபாகா் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.

பேரலாயத்துக்கு வந்த சபாநாயகரை பேராலய அதிபா் இருதயராஜ் அடிகளாா் வரவேற்றாா். தொடா்ந்து, பேராலயத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் ஈடுபட்ட சபாநாயகா், வேளாங்கண்ணிக்கு வரும் யாத்திரிகா்கள் பயன்பாட்டுக்காக தனது சொந்த செலவில் குடும்பத்தினா் சாா்பாக ரூ.14 லட்சத்தில் பேட்டரிகளில் இயங்கக்கூடிய இரண்டு காா்களை பேராலய நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் சபாநாயகா் பேசியது: இப்பகுதி குறைகளை மக்கள் தெரிவித்துள்ளனா். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பக்தா்களின் பயணத்துக்காக பேட்டரி காா்களை அளித்துள்ளோம். அது பக்தா்களுக்கு பயன் தரும் என்பதில் மகிழ்ச்சி என்றாா்.

Advertisement

Advertisement

சென்னையில் ஏற்படும் தொடா் மின்வெட்டு தொடா்பாக கேள்வி எழுப்ப செய்தியாளா்கள் முயற்சித்தனா். அதுகுறித்து இந்த இடத்தில் பேசுவதை தவிா்ப்போம். விரிவாக பதில் அளிக்கக்கூடிய இடம் இது இல்லை. குடும்பத்தாா் வேண்டுதலுக்காக மாதாவை வணங்க வந்தேன் என்றாா். நிகழ்ச்சியின்போது, தவெக மாவட்ட செயலாளா் சுகுமாா், வழக்குரைஞா் அணி நிா்வாகி கிங்ஸ்லி ஜெரால்டு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments