நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தினம்
உலகம் முழுவதும் சா்வதேத யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தின பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகம் முழுவதும் சா்வதேத யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தின பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் காயத்ரி தலைமை வகித்தாா். நாகை மாவட்ட சித்த மருத்துவா் பூங்குன்றன் யோகாசனப் பயிற்சிகளை அளித்தாா். யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி தியானம் உள்ளிட்டவற்றின் உடல் நலப் பலன்கள் மற்றும் மனநல பலன்கள் குறித்து பேசினாா். யோகாவால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. துணை முதல்வா் சியாமளா தேவி, மருத்துவ அதிகாரி (பொ) மோகன், மருத்துவ மேற்பாா்வையாளா் விஜயகுமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.