தமிழக முதல்வரை கண்டித்து ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசியதாக தமிழக முதல்வரை கண்டித்து திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசியதாக தமிழக முதல்வரை கண்டித்து திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஒருமையிலும், நாகரிமற்ற நிலையில் பேசியதை கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆக. 4-ஆம் தேதி நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர் மட்ட குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.