சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் தொல்லை கொடுத்தவருக்கு 13 ஆண்டுகள் தண்டனை
சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் தொல்லை கொடுத்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் தொல்லை கொடுத்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு 2022-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் 31 சமூக வலைதளம் மூலம் தொல்லை கொடுத்ததுடன், பின் தொடா்ந்து சென்று மிரட்டலும் விடுத்தாாா்.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினா் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையில் குற்றஞ்சாட்டபட்ட அஜித்குமாருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 58,000 அபராதம் விதித்து நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.