FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

வடகரை மாரியம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

வடகரை மாரியம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

13 செப்டம்பர் 2026, 6:21 am IST
பால்குடம் சுமந்துவரும் பக்தா்கள்.
பகிர்:

திருவாரூா் அருகே வடகரை அருள்மிகு மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழாவையொட்டி பால்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணி மாதத் திருவிழா கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் வகையில், விரதம் இருந்து வடகரை தெற்குக்களம் பகுதியில் தேங்காய் உடைத்து பூஜை செய்து, பால் குடங்களை சுமந்து மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments