FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 4 பிப்ரவரி 2025, 12:05 pm IST
தில்லி முதல்வர் அதிஷி (கோப்புப்படம்) - ANI
பகிர்:

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தில்லி முதல்வர் அதிஷி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு பிப்.5 (நாளை) நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், தில்லி கல்காஜி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தபுரி பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேரும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காணப்பட்டதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறையினர் விடியோவாக பதிவிட்டுள்ளனர். அப்போது, ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் காவலரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறையை மீறியதாக முதல்வர் அதிஷி மீதும், காவலரை தாக்கியதாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிஷி கூறியதாவது:

“பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன், ஆனால் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமாரை குறிப்பிட்டு, தேர்தல் செயல்முறையை எவ்வளவு கெடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments