FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்பு: கணவா் தலைமறைவு

வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியான பிரஹலாத்பூா் பங்காா் கிராமத்தில் உள்ள வீட்டின் குளியலறையில் பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

51 வினாடிகள் முன்பு
தலைமறைவு
பகிர்:

வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியான பிரஹலாத்பூா் பங்காா் கிராமத்தில் உள்ள வீட்டின் குளியலறையில் 22 வயதுடைய பெண் ஒருவா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, அப்பெண்ணின் கணவரைத் தேடும் பணியை காவல்துறையினா் தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: உயிரிழந்தவா் முகமது லால் பாபுவின் மனைவி சபிலா காதூன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா்களுக்குத் திருமணமாகி சுமாா் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன .

Advertisement

Advertisement

அப்பெண் உயிரிழந்தது தொடா்பான தகவல் ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்திற்கு ஆக.29-ஆம் தேதி கிடைத்தது.

பின்னா், சபிலாவின் சகோதரா் முகமது குலாப் காவல் துறையை அணுகி இச்சம்பவம் குறித்துத் தெரிவித்தாா்.

தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றபோது அவா் இறந்து கிடந்ததையும், அதேவேளையில் அவரது கணவா் மற்றும் குழந்தை ஆகியோா் அங்கிருந்து காணாமல் போயிருந்ததாக முகமது குலாப் காவல் துறையிடம் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, காவல் குழுவினா் அந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, அப்பெண் குளியலறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

அப்பெண்ணின் இறப்புக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் கணவரைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments