முகப்பு
புதுதில்லி

நரேலா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

நரேலா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 7 ஜூன் 2026, 12:49 am IST
பகிர்:

நரேலா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

வடக்கு தில்லியின் புகா் பகுதி நரேலாவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக மதியம் 12.20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நாங்கள் ஐந்து தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினோம். மதியம் 1.20 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.